Editor001

அக்கரைப்பற்றில் களவாடப்பட்ட மோட்டார் சைக்கிள் காத்தான்குடியில் மீட்பு!

அக்கறைப்பற்றில் களவாடப்பட்ட 8 இலட்சம் ரூபாய் பெறுமதியான மோட்டார் சைக்கிள் காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூநொச்சிமுனையில் கைப்பற்றட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தெரிவித்தார். பொலிஸ்மா அதிபரின் விசேட பணிப்பின் பேரில் நாடு முழுவதிலும் ஒரே நேரத்தில் நடத்தபட்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது காத்தான்குடி பொலிஸார் பூநொச்சிமுனை உள்வீதியில் நடத்திய திடீர் சோதனையில் குறித்த மோட்டார் சைக்கிள் ஆவணங்கள் எதுவுமின்றி காணப்பட்டதால் இதனை மீட்டதுடன் சந்தேக நபரையும் கைது செய்தனர். குறித்த  மோட்டார்…

Read More

மருந்துகளின் விலைகள் விரைவில் குறைப்பு!

மருந்து வகைகளின் விலைகள் விரைவில் 10 தொடக்கம் 15 சதவீதம் வரை குறைவடையும் எனவும் எதிர்வரும் வாரமளவில் இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிக்கை வெளியிடப்படும் எனவும் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். இந்த விலைகுறைப்பின் இறுதி முடிவுகள் தொடர்பில் திறைசேறி அலுவலர்களுடன் கலந்துரையாடி உள்ளோம். அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பதால் விலைகள் குறைக்கப்படும் என அவர் தெரிவித்தார். டொலரின் பெறுமதி உயர்ந்த போது மருந்துகளின் விலைகளிலும் குறிப்பிடத்தக்க அளவு உயர்வு ஏற்பட்டது….

Read More

முஜிபுர் ரஹ்மானுக்கு புதிய பதவி!

ஐக்கிய மக்கள் சக்தி செயற்குழுவின் அனுமதியுடன், அக் கட்சியின் இரண்டு பதவிகளுக்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சஜித் பிரேமதாச தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் (16) நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன், ஐக்கிய மக்கள் பிரதி செயலாளராக முன்னாள் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதங்கள், கட்சித்தலைவர்…

Read More

கிழக்கு புதிய ஆளுநருக்கு முபாற‌க் மௌல‌வி வாழ்த்து!

கிழ‌க்கு மாகாண‌ ஆளுன‌ராக‌ ஜ‌னாதிப‌தி ர‌ணில் விக்ர‌ம‌சஇங்க‌ அவ‌ர்க‌ளால்  நிய‌மிக்க‌ப்ப‌ட்டுள்ள‌ இல‌ங்கை தொழிலாள‌ர் காங்கிர‌சின் த‌லைவ‌ர் செந்தில் தொண்ட‌மான் அவ‌ர்க‌ளுக்கு ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி த‌ன‌து வாழ்த்துக்க‌ளையும் வ‌ர‌வேற்பையும் தெரிவித்துள்ள‌து. இது ப‌ற்றி கட்சியின் த‌லைவ‌ர் முபாற‌க் மௌல‌வி தெரிவித்த‌தாவ‌து,  கிழ‌க்கு மாகாண‌த்தின் இர‌ண்டாவ‌து த‌மிழ் பேசும் ஆளுன‌ராக‌ செந்தில் தொண்ட‌மான் நிய‌மிக்க‌ப்ப‌ட்டுள்ளார். அவ‌ர் கிழ‌க்கு மாகாண‌த்தை சேராத‌வ‌ராக‌ இருந்தாலும் அவ‌ரும் இந்த‌ நாட்டு குடிம‌க‌ன் என்ற‌ வ‌கையிலும் த‌மிழ் பேசுப‌வ‌ர் என்ற‌ வ‌கையிலும் அவ‌ரின் நிய‌ம‌ன‌த்தை…

Read More

மீண்டும் கொரோனா அலை?

கடந்த 20 நாட்களில் 16 கொவிட் நோயாளிகள் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது. ஏப்ரல் 23 ஆம் திகதி கொவிட் நோயால் ஒரு மரணமும், அந்த மாதம் 27 ஆம் திகதி ஒரு மரணமும் பதிவாகியது , தொடர்ந்து மே 01 ஆம் திகதி ஒரு இறப்பு மற்றும் மே 5 ஆம் திகதி மேலும் மூன்று கொவிட் இறப்புகலும் பதிவாகியுள்ளதாக தொற்றுநோயியல் துறை மேலும் கூறுகிறது. இதேவேளை, கடந்த 8ஆம் மற்றும் 9ஆம்…

Read More

நாடு திரும்பியதும் போதகர் ஜெரோம் பெர்னாண்டோ கைது செய்யப்படுவார்!

போதகர் ஜெரோம் பெர்னாண்டோ நாடு திரும்பியதும் கைது செய்யப்படுவார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவா இன்று (17) தெரிவித்துள்ளார். மத போதகர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், பௌத்த மதம் தொடர்பில் அண்மையில் அவர் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தொடர்பில் அவர் நாடு திரும்பியதும் கைது செய்யப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு எதிரான பயணத்தடையை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று கோட்டை நீதவான் நீதிமன்றில் பெற்றுக்கொண்டனர். இருப்பினும்…

Read More

‘பிராந்திய தேவைகளில் இணைந்து செயற்படும் நம்பிக்கை பிறந்துள்ளது’ – ஆளுநர்களுக்கு ரிஷாட் வாழ்த்து!

பிராந்திய நலன்களிலும், பிரதிநிதித்துவம் செய்யும் மக்களின் நோக்குகளிலும் இணைந்து செயற்படுவதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கு மாகாணங்களின் புதிய ஆளுநர்களை வாழ்த்தி அவர் வெளியிட்டுள்ள  செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “வடக்கு, கிழக்கு மாகாணங்களின் புதிய ஆளுநர்களான திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோர் சிறுபான்மை சமூகங்களின் பூர்வீகத்திலுள்ளவர்கள். இதனால், எமது மக்களின் அபிலாஷைகள் பற்றி புதிதாக இவர்களுக்கு எதையும் சொல்ல வேண்டியதும் இல்லை….

Read More

குர்ஆனின் சிங்கள மொழிபெயர்ப்பு விநியோகம்!

இந்தியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, இந்தியாவுக்கான சவூதி அரேபியாவின் தூதுவர் சலேஹ் ஈத் அல் ஹுசைனியிடம் நேற்று (16) புனித குர்ஆனின் சிங்கள மொழிபெயர்ப்பின் பிரதியை வழங்கினார்.  புதுடெல்லியில் உள்ள இஸ்லாமிய நாடுகளின் தூதுவர்களுடன் உரையாடலை மேம்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, நேற்று காலை உயர்ஸ்தானிகர் மொரகொட, புதுடெல்லியில் உள்ள சவூதி அரேபியாவின் தூதரகத்தில் தூதுவர் அல் ஹுசைனியை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, இலங்கை உயர்ஸ்தானிகர் மற்றும் சவுதி தூதுவர் ஆகியோர் இந்தியாவின்…

Read More

மஹிந்தவின் பயணத்தடை நீக்கம்!

கடந்த வருடம் மே 09 சம்பவத்தையடுத்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் காஞ்சன ஜெயரத்ன ஆகியோருக்கு விதிக்கப்பட்டிருந்த பயணத் தடை கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் நீக்கப்பட்டுள்ளது.

Read More

வடபுலத்திலிருந்து வெளியேற்றப்பட்ட சமூகங்களை மீளக்குடியேற ஜிஹான் ஹமீட் அழைப்பு!

வட மாகாணத்திலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மீளவும் தங்களது சொந்த தாயகத்தில் மீளக்குடியமரத் தயாராகுமாறு தேசியவாத முன்னணியின் முக்கியஸ்தர் ஜிஹான் ஹமீட் கோரிக்கை விடுத்துள்ளார். “பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்ட பின்னர், நாட்டில் நிலவும் சுமுக சூழலில், இலங்கையர் ஒவ்வொருவரதும் பூர்வீக வாழிடங்களில் வாழும் உரித்தை உறுதிப்படுத்த வேண்டியுள்ளது. தேசியவாத முன்னணி இவ்விடயத்தில் உறுதியுடனுள்ளது. பயங்கரவாதத்தின் இனச் சுத்திகரிப்பை ஜனநாயக அரசாங்கம் ஏற்கப்போவதில்லை. எனவே, வட மாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மற்றும் சிங்களவர்களை பூர்வீக வாழிடங்களில் மீளக் குடியமர்த்தும் செயற்பாடுகளில்…

Read More

மதவாச்சி றஷீத் பின் அப்தில்லாஹ் அரபுக் கல்லூரியின்  பட்டமளிப்பு விழா – பிரதம அதிதியாக ரிஷாட் பங்கேற்பு!

அநுராதபுரம், மதவாச்சி றஷீத் பின் அப்தில்லாஹ் அரபுக் கல்லூரியின் அல்-ஆலீம்களுக்கான 02ஆவது பட்டமளிப்பு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை (07) மதவாச்சி, முகையதீன் ஜும்ஆ பள்ளிவாயலில் நடைபெற்றது. அரபுக் கல்லூரியின் தலைவர் அல்-ஹாஜ் சஹாப்தீன் மற்றும் அதிபர் அஷ்-ஷெய்ஹ் பாயிஸ் (றஷாதி) தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் கலந்துகொண்டதுடன், விஷேட பேச்சாளராக ஜம்இய்யத்துல் உலமா சபையின் பத்வா குழு உறுப்பினர் யஹ்யா (பலாஹி) சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில், கல்லூரியின் உபதலைவர் கலீலுல்…

Read More

முஸ்லிம் சமூக சவால்களை கலந்தாலோசிக்க நஸீர் அஹமட் அவசர அழைப்பு!

முஸ்லிம் சமூகத்தின் சமகால சவால்களை தீர்த்துவைக்கும் பொதுவான வரைபை தயாரிக்கும் தருணம் வந்துள்ளது.இனியும், தனித்தனியாகச் செயற்பட்டு சமூக உரிமைகளை வெல்ல முடியாதென்பதே நிதர்சனமாகியுள்ளதாக அமைச்சர் நஸீர்அஹமட் தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது சிறுபான்மை சமூகங்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஜனாதிபதி முனைப்புடன் செயற்படுவதை நான் அறிவேன்.எனவே, இழக்கப்பட்ட முஸ்லிம்களின் காணிகளை மீளப்பெறவும்,இதனுடன் தொடர்புடைய ஏனைய பிரச்சினைகள் குறித்தும் பொதுவான வரைபை தயாரிக்க வேண்டியுள்ளது.வடக்கில் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட பின்னர் பறிபோன காணிகள் மற்றும் கிழக்கில்…

Read More

மன்னார் பாடசாலைகளுக்கு இராணுவப் பாதுகாப்பு!

மன்னாரில் கடந்த சில நாட்களாக சிறுவர்களை இலக்கு வைத்து கடத்தல் முயற்சிகள் இடம்பெறுவதாகவும் கடந்த சனிக்கிழமை மற்றும் நேற்றைய தினம் (08) மக்கள் நடமாட்டம் குறைந்த பாதை வழியாக பயணித்த தங்களுக்கு, உணவு பொருட்களை வழங்கி கடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக பாதிக்கப்பட்ட இரண்டு சிறுவர்கள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் குறித்த விடயம் மாவட்ட அரசாங்க அதிபர், வலயக்கல்வி பணிப்பாளர், மன்னார் பொலிஸார், இரானுவத்தினரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட நிலையில், இன்று (09) செவ்வாய்க்கிழமை மன்னாரில் உள்ள பாடசாலைகளுக்கு விசேட…

Read More

‘அரகல’ மக்கள் போராட்டத்தை தடுக்க புதிய ஆணைக்குழு?

இலங்கையில் ‘அரகலய’ மக்கள் இயக்கத்திற்கு நிகரான போராட்டங்களை எதிர்காலத்தில் தடுக்கும் வகையில், பூரண அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை அமைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது, அமைச்சரவையினால் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டதாக, அமைச்சரவை இணைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர், நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்காகவே அமைச்சரவை இவ்வாறான கோரிக்கையை முன்வைத்துள்ளதாக…

Read More

மரண தனடனையிலிருந்து தப்பித்த இளைஞன் – சவுதி இளவரசரின் முன்மாதிரி!

கொலை வழக்கில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு சவுதி இளவரசர் ஒரு இளைஞனின் உயிரைக் காப்பாற்றியதாக சமூக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மறைந்த மன்னர் ஃபஹத்தின் மகன் இளவரசர் அப்துல் அஜீஸ் பின் ஃபஹ்த், குற்றவாளியின் மரணதண்டனையை கைவிடுவதற்கு தேவையான இரத்தப் பணத்தை முடிக்க கிட்டத்தட்ட SR2 மில்லியன் செலுத்தினார். வெசம் அல் தர்ஹூனி என்ற அந்த இளைஞன், ஐந்து வருடங்களாக சிறையில் இருந்து வருகிறார் மரணதண்டனையிலிருந்து தப்பிக்க அவரது தாய் SR5…

Read More

4 சிறுவர்கள் தாக்கல்செய்த அடிப்படை உரிமை மனுக்கள்!

14 வயதுக்குட்பட்ட நான்கு சிறுவர்கள் தாக்கல் செய்த 4 அடிப்படை உரிமை மனுக்களை பரிசீலிப்பதற்கு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டதாக சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு எதிரான பொய்யான  வாக்குமூலத்தில் கையொப்பமிட குற்றப் புலனாய்வு பிரிவினர்  வற்புறுத்தியதாக மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர். தாங்கள் சித்திரவதை செய்யப்பட்டதாகவும் மனுதாரர்களான சிறுவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்படவில்லை!

கோதுமை மாவின் விலை அதிகரித்துள்ளதாக சில ஊடகங்கள் கூறிய போதிலும் மாவின் விலை அதிகரிக்கப்படவில்லை என இலங்கையின் இரண்டு பிரதான கோதுமை மா நிறுவனங்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

Read More

பௌசியின் கட்சி உறுப்பினர் பதவியை இடைநிறுத்த தீர்மானம்!

கட்சியின் தீர்மானங்களுக்கு எதிராக செயற்பட்டதன் காரணமாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம்.பௌசியின் கட்சி உறுப்பினர் பதவியை இடைநிறுத்த கட்சி தீர்மானித்துள்ளது.   சர்வதேச நாணய நிதியத்தின் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்ததன் அடிப்படையில் திங்கட்கிழமை (08) பிற்பகல் கூடிய கட்சியின் செயற்குழு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாநகரசபை வேட்பாளர் பதவிக்கு போட்டியிடுவதற்காக முஜுபர் ரஹ்மான் தனது எம்.பி பதவியில் இருந்து விலகியதை அடுத்து, வெற்றிடமான பதவிக்கு  பௌசி தெரிவு…

Read More

‘தேசிய எல்லை நிர்ணய குழுவின் இறுதி அறிக்கை மே மாத இறுதியில் சமர்ப்பிக்கப்படும்’ – தேசப்பிரிய!

உள்ளூராட்சி நிறுவனங்களின் எல்லை நிர்ணய தேசிய குழுவின் இறுதி அறிக்கை இம்மாதம் இறுதி வாரத்தில் கையளிக்கப்படும் என அதன் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இடைக்கால அறிக்கைக்காக இதுவரை பல்வேறு தரப்பினரிடம் இருந்து கிட்டத்தட்ட 400 முன்மொழிவுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், தனது அவதானிப்புகளை உரிய தரப்பினருக்கு விரைவில் அனுப்ப எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உள்ளூராட்சி நிறுவனங்களை எல்லை நிர்ணயம் செய்வதற்கான தேசிய குழுவின் இடைக்கால அறிக்கை ஏப்ரல் 11ஆம் திகதி பிரதமரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பான கருத்துக்களையும்…

Read More

கீரி சம்பாவின் அதிகபட்ச சில்லறை விலையில் மாற்றம் இல்லை!

கீரி சம்பாவிற்கு அரசாங்கம் அறிவித்துள்ள அதிகபட்ச சில்லறை விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. 2022 மே 2 ஆம் திகதி வெளியிடப்பட்ட அதிவிசேட ர்த்தமானியின்படி, ஒரு கிலோகிராம் கீரி சம்பாவின் அதிகபட்ச சில்லறை விலை ரூ.260 ஆக இருக்கும் என நுகர்வோர் விவகார அதிகார சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. கீரி சம்பா மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலை மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்ற அனைத்து கூற்றுகளையும் நுகர்வோர் விவகார அதிகார…

Read More

காத்தான்குடி பிரதேச செயலகத்தின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்!

காத்தான்குடி பிரதேச செயலகத்தின் வேலைத் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று திங்கட்கிழமை (08) நடைபெற்றது. காத்தான்குடி பிரதேச செயலாளர் உதய சிறீதர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், நிர்வாக கிராம உத்தியோகத்தர் எம்.எம.ஜரூப், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி பத்மா ஜெயராஜ், கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர். இதன்போது  உணவுப் பாதுகாப்புத் தொடர்பான ஆய்வு நடவடிக்கை முன்னேற்றம் தொடர்பாக…

Read More

‘வடக்கிலுள்ள விகாரைகள் சட்டவிரோதம் என்றால், தெற்கிலுள்ள இந்து ஆலயங்களும் சட்டவிரோதமானவையே’ – சரத் வீரசேகர!

வடக்கில் அமைக்கப்பட்டுள்ள விகாரைகள் சட்டவிரோதம் என்றால் தெற்கில் அமைக்கப்பட்டுள்ள இந்து ஆலயங்களும் சட்டவிரோதமானவையே என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். தையிட்டியில் தமிழ் மக்களின் காணிகளை ஆக்கிரமித்து சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையை அகற்றுமாறு கோரி முன்னெடுக்கப்பட்ட தொடர் போராட்டம் தொடர்பில்  ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில், இலங்கையிலுள்ள 25 மாவட்டங்களிலும் தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ்கின்றார்கள். அவர்கள் தங்கள் குல…

Read More

’பௌத்த மயமாக்கலின் உச்ச கட்டம்’

பயங்கரவாத யுத்தத்தினாலும் பொருளாதார அனர்த்தத்தினாலும் பாதிக்கப்பட்ட வட, கிழக்கு வாழ் மக்கள் மீது பௌத்த மேலாதிக்கமும் தலை விரித்தாடுகின்றது என கிண்ணியா நகர சபையின் முன்னாள் உறுப்பினரும் திருகோணமலை மாவட்ட பள்ளி வாசல்கள் சம்மேளன செயலாளருமான எம்.எம்.மஹ்தி குற்றஞ்சாட்டினார். திருகோணமலை மீடியா போர ஊடக மையத்தில் இன்று (08) காலை நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “வட, கிழக்கு வாழ் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் காணிகள் பல்வேறு…

Read More

அமெரிக்கா சென்றுள்ள பசில் நாடு திரும்பப் போவதில்லை?

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் அவரது மனைவி புஷ்பா ராஜபக்ஷ இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளனர். அவர்கள் எமிரேட்ஸ் விமானம் மூலம் துபாய் சென்றுள்ளனர். அங்கிருந்து அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் செல்கின்றனர். பசில் ராஜபக்ஷவின் திடீர் அமெரிக்க விஜயத்திற்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், அண்மையில் பொதுஜன பெரமுனவின் மே பேரணியின் பின்னர், கட்சியின் தலைவர் மற்றும் வருங்கால வேட்பாளராக கட்சியின் சில பிரதிநிதிகள்…

Read More

ஜனாஸா எரிப்பு; பாதிக்­கப்­பட்டவர்களுக்கு நீதி கிடைக்குமா?

கொவிட் 19 வைரஸ் தொற்று தொடர்பில் துறைசார் நிபுணர் குழு பிழை­யான தீர்­மானம் மேற்­கொண்­டதால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நஷ்டஈடு வழங்­கப்­பட வேண்டும் எனவும், பிழை­யான தீர்­மானம் மேற்­கொண்ட துறைசார் நிபு­ணர்கள் மற்றும் அதி­கா­ரி­க­ளுக்கு எதி­ராக ஒழுக்­காற்று நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்டு உரிய தண்­டனை வழங்­கப்­பட வேண்டும் என்றும் இவ்­வி­வ­காரம் தொடர்பில் ஆணைக்­கு­ழு­வொன்று நிய­மித்து இதன் பின்­னணி கண்­ட­றி­யப்­பட வேண்டும் எனவும் முஸ்லிம் அர­சியல் தலை­வர்கள் கோரிக்கை விடுத்­துள்­ளனர். ஓட்­ட­மாவடி விஷேட மைய­வா­டியில் நல்­ல­டக்கம் செய்­யப்­பட்­ட­வர்­களின் குடும்­பங்­க­ளுக்கும், தகனம் செய்­யப்­பட்ட…

Read More