Editor001

‘ஐக்கிய மக்கள் சக்தியால் மட்டுமே நாட்டை திறமையாக ஆட்சி செய்ய முடியும்’ – கபிர் ஹாசிம்!

ஐக்கிய மக்கள் சக்தியால் மட்டுமே நாட்டை திறமையாக ஆட்சி செய்ய முடியுமென பாராளுமன்ற உறுப்பினர் கபிர் ஹாசிம் மொனராகலையில் நிகழ்வொன்றில் பேசிய போது தெரிவித்தார். பல்வேறு சந்தர்ப்பங்களில் ஜனாதிபதி பதவியை அடைவதற்கான சாத்தியங்கள் இருந்தபோதும், அவர் தனது கொள்கையில் உறுதியாக இருந்தமையே சஜித் பிரேமதாசவுடன் நான் இணைந்து கொள்ள முக்கிய காரணம் என அவர் மேலும் தெரிவித்தார். ஆட்சியமைக்க ஒரு கட்டளை அவசியமானது. அது சட்டபூர்வமான தேர்தலின் மூலமே சாத்தியமாகும் என அவர் தெரிவித்தார்.

Read More

கெலிஓய அஸ்ஸிராஜ் கல்லூரி வரலாற்றில் இடம்பிடித்த அன்புக்குரிய A.M.S.Nazeema அதிபர்!

நூற்றாண்டு கடந்து மூன்று தசாப்தங்களாகும் (1892) கெலிஓய அஸ்ஸிராஜ் ஆண்கள் கல்லூரியின் வரலாற்றில் இடம்பிடித்த முதலாவது பெண் அதிபரான அன்புக்குரிய திருமதி A.M.S. Nazeema Madam அவர்கள், கடந்த ஆண்டு டிசம்பருடன் சேவையிலிருந்து ஓய்வுபெற்றார். வரலாற்றில் எல்லோருக்குமான ஒரு பக்கம் இருந்தாலும் அவரவரது பக்கத்தை சமூகமே படிக்கும் படி அமைத்துக் கொள்வது அவரவர் கைகளிலேயே உள்ளது.  அகுரனை 6ம் மைல் கல்லைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், பேராதனைப் பல்கலையில் தனது B.A. பட்டத்தை தொடரும் காலமே மௌலவியா…

Read More

பெரியமுல்லையில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவரின் ஜனாஸா மீட்பு!

நீர்கொழும்பு, பெரியமுல்லையைச் சேர்ந்த 60 வயது நபர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு இரண்டு நாட்களுக்குப் பின் சடலமாக மீட்கப்பட்டார். 4ம் திகதி வியாழக்கிழமை இரவு பெய்த கடும் மழையினால் நீர்கொழும்பு கட்டான தொகுதிகளின் எல்லையை ஊடருத்துச் செல்லும் “தெபாஎல” பெருக்கெடுத்ததில் வெள்ளம் ஏற்பட்டு ஓடையில் நீர் வேகமாக பாய்ந்தோடுகின்றது. பெரியமுல்லை, செல்லகந்த வீதியில் அமைந்துள்ள தனது வீட்டிற்கு வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணியளவில் செல்லும் போது இவர் செல்லும் வழியில் பாலத்தை கடக்கும் போது வேகமாசெல்லும் வெள்ள நீருக்கு…

Read More

கோதுமை மா, சீனி விலை அதிகரிப்பு!

கோதுமை மா மற்றும் சீனி ஆகியவற்றின் விலை அதிகரித்துள்ளதாக அத்தியாவசிய உணவு பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, கோதுமை மா கிலோவொன்றின் விலை 10 ரூபாவினாலும், சீனி கிலோவொன்றின் விலை 25 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது. கோதுமை மாவுக்கான இறக்குமதி வரி விலக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் திரும்பப் பெறப்பட்டதையடுத்து, அதன் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

புல்மோட்டை, ஜின்னா நகரில் யானைகளின் அட்டகாசம் – வயோதிபர் உயிரிழப்பு!

திருகோணமலை, புல்மோட்டை பகுதியில் இன்று (07) அதிகாலை யானை தாக்கியதில் வயோதிபரொருவர் உயிரிழந்துள்ளார். திருகோணமலை – புல்மோட்டை 04 ஜின்னா நகரில் தொடர்ச்சியாக யானையின் அட்டகாசம் இருந்து வரும் நிலையில், இன்று அதிகாலை 03:30 மணியளவில் யானை குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்துள்ளது. இதை தடுப்பதற்காக சிலர் ஈடுபட்டு நிலையில், முன்னாள் தபால் ஊழியரான 58 வயதான அப்துல்லத்தீப் அன்வர் என்பவர் யானை தாக்குதலுக்கு உள்ளாகி உயிரெழுந்துள்ளார். மேலும் சில வீடுகளுக்கு சேதம் ஏற்படுத்திவிட்டு, ஒரு வீட்டை உடைத்து…

Read More

இலங்கையின் வறுமை வீதம் 25 சதவீதமாக இரட்டிப்பு!

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி, வறுமை வீதம் 13.1 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக இரட்டிப்பாக்கியுள்ளதாக உலக வங்கி அறிவித்துள்ளது. அத்துடன் குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கு ஏற்படும் பல அபாயங்கள் காரணமாக அடுத்த சில வருடங்களில் அது 25 சதவீதத்திற்கு மேல் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. பொருளதார நெருக்கடியானது வறுமைக் குறைப்பு மற்றும் மனித மூலதன மேம்பாடு ஆகியவற்றில் பாரிய பின்னடைவுகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் நாட்டின் பொருளாதாரம் இந்த ஆண்டும் அதற்கு அப்பாலும் குறிப்பிடத்தக்க…

Read More

கண் சத்திரசிகிச்சை செய்த 10 நோயாளர்களின் பார்வை இழப்பு!

கண் சத்திரசிகிச்சை செய்யப்பட்ட 10 நோயாளர்களின் பார்வை பாதிப்பு ஏற்பட்டுள்ள சம்பவம் நுவரெலியாவில் பதிவாகியுள்ளது. இவர்கள், நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை செய்துகொண்டவர்கள் என தெரியவருகின்றது. கண் சத்திரசிகிச்சை செய்துகொண்ட 10 நோயாளர்கள் உரிய பார்வை கிடைக்காமல் தொடர்ந்து வைத்தியசாலையில் தாங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி முதல் சத்திரசிகிச்சைக்குள்ளான 10 நோயாளர்களே இவ்வாறு தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருவதாகவும் இதில் ஓரளவு கண் பார்வை குறைவாக இருந்து சத்திரசிகிச்சை…

Read More

போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்கு ஒப்பான செயல்களை மேற்கொள்ளும் சுகாதார அமைச்சர் – புபுது ஜயகொட!

போதைப்பொருள் கடத்தலின் பின்னணியில் சுகாதார அமைச்சரும் செயலாளரும் நேரடியாக செயற்படுவதாக முன்னிலை சோசலிசக் கட்சியின் செயலாளர் புபுது ஜய கொட தெரிவித்துள்ளார். குறைந்த விலையில் மருந்துகளைக் கொள்வனவு செய்யக்கூடிய நிறுவனங்கள் உள்ள நிலையில், ஏனைய நிறுவனங்களிடமிருந்து அதிக விலைக்கு மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு சுகாதார செயலாளர் அமைச்சரவை பத்திரத்தை தயாரித்துள்ளதாகவும் செயலாளர் குறிப்பிட்டார். நுகேகொடையில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். அரசியல்வாதிகளின் அழுத்தத்தின் பேரில் இவ்வாறான அமைச்சரவைப் பத்திரங்கள்…

Read More

தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ள அரச ஊழியர்களுக்கான அறிவித்தல்!

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ள அரச உத்தியோகத்தர்களை மீள சேவையில் இணைத்துக் கொள்வதற்கான சுற்றறிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை வெளியிடப்படவுள்ளது. உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சர் ஜனக்க வக்கும்புர, நேற்றைய தினம் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோது, இதனை தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக, வேட்புமனுக்களைத் தாக்கல் செய்த அரச ஊழியர்களை மீளவும் சேவையில் இணைக்க, கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது. இதன்படி, அவர்கள் போட்டியிடவுள்ள தேர்தல் தொகுதியில்…

Read More

கிழக்கு மாகாண ஆளுநர் பதவியை இராஜினாமா செய்யவுள்ள அனுராதா யஹம்பத்!

கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத், இன்னும் சில தினங்களில் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ய நேரிடும் என தெரிவித்துள்ளார். திருகோணமலையில் நேற்று (06) இடம்பெற்ற வெசாக் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்நிகழ்வில் உரையாற்றிய கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத், கிழக்கு மாகாணத்தில் இதுவே தனது கடைசி உரையாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 04 மாகாணங்களின் ஆளுநர்களை தமது பதவிகளை இராஜினாமா செய்யுமாறு அறிவித்துள்ளார். சப்ரகமுவ,…

Read More

உத்தேச பயங்கரவாதத் தடுப்புச் சட்டமூலம் – ஆளும் கட்சிக்குள் வலுக்கும் முரண்பாடுகள்!

உத்தேச பயங்கரவாதத் தடுப்புச் சட்டமூலம் குறித்து ஆளும் கட்சிக்குள் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சட்டமூலத்தின் சரத்துக்களுக்கு உடன்பட முடியாது என்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி  அண்மையில் பகிரங்கமாகத் தெரிவித்துடன், கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த் குமாரும் சட்டமூலத்துக்கு எதிராக வாக்களிக்கவுள்ளதாக குறிப்பிட்டார். கடந்த 25ஆம் திகதி சட்டமூலத்தை சமர்ப்பிக்க இருந்த நிலையில், எதிர்ப்பு நிலைமையைக் கருத்திற் கொண்டு குறித்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்பிப்பது மேலும் தாமதமாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது. உத்தேச…

Read More

தென்கிழக்குப் பல்கலைக்கழக 15 வது பட்டமளிப்பு விழா!

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பதினைந்தாவது பொதுப் பட்டமளிப்பு விழா எதிர்வரும் மே மாதம் 13 ஆம் 14 ஆம் திகதிகளில் நடத்தப்படுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்பட்டமளிப்பு விழா நிகழ்வுகள் பல்கலைக்கழக மாநாட்டு மண்டபத்தில் உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபுபக்கர் தலைமையில் வேந்தர் பாயிஸ் முஸ்தபாவின் முன்னிலையில் இடம்பெறவுள்ளது.  இம்முறை பட்டமளிப்பு விழா நிகழ்வுகள் இரண்டு நாட்களுக்கு ஐந்து அமர்வுகளாக நடத்துவதற்கு ஏற்பாடாகியுள்ளன. முதல் அமர்வில் கலை கலாசார, தொழில்நுட்ப பீடங்களைச் சேர்ந்த 395 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்படவுள்ளன….

Read More

கொவிட் தொற்றினால் மூவர் மரணம்!

கொவிட் தொற்றினால் நேற்று முன்தினம் (5) மூவர் உயிரிழந்துள்ளனர்.சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று (6) வெளியிடப்பட்ட கொவிட் மரண அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, நேற்றைய தினம் 8 பேருக்கு புதிதாக கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.அத்துடன், 13 பேருக்கு நேற்றுமுன்தினம் (5) கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

ரணிலின் மடியிலுள்ள ராஜ யோகம்..!-சுஐப் எம். காசிம்-

மன்னர் சாள்ஸின் முடிசூட்டு விழாவில் பங்கேற்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைக்கப்பட்டமை அவரது சர்வதேச செல்வாக்கை நிரூபித்திருக்கிறது. இதற்கு முன்னரும் எலிசபத் மகாராணியின் முடிசூட்டு விழாவுக்கு 1953 இல், அப்போதைய அரச தலைவரான டட்லியுடன் ரணிலின் தந்தையான எட்மன் விக்ரமசிங்க சென்றிருந்தார். நாட்டுக்கு அவசரமாகத் தேவையாகவிருந்த நிதி நிவாரணங்களைப் பெற்றுவந்த பெருமையிலிருந்த ரணிலுக்கு கிடைத்த அடுத்த மவுசு இது. மேலைத்தேய நாடுகளின் அரசியலில் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் செல்வாக்குச் செலுத்துவதாக பெருமை பேசப்படும் சூழலில், இவ்வாறான நிதியுதவிகள்…

Read More

பிரிட்டன் மன்னராக முடி சூடினார் மூன்றாம் சார்ள்ஸ்!

பிரிட்டன் மன்னராக மறைந்த பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மூத்த மகன் மூன்றாம் சார்ள்ஸ் முடிசூடிக்கொண்டார். மறைந்த பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத் தனது முடிசூட்டு நிகழ்ச்சியில் அணிந்த அதே எட்வர்ட் மகுடத்தை தலையில் அணிந்து முடிசூடிக்கொண்டார் அரசர் இரண்டாம் சார்ள்ஸ். இதையடுத்து, அவரது மனைவி கமீலா பார்கருக்கு ராணிக்கான மகுடம் சூட்டப்பட்டது. லண்டன் வெஸ்ட்மின்ஸ்டா் தேவாலயத்துக்கு தங்க ரதத்தில் வந்திறங்கிய மூன்றாம் சார்ள்ஸ். அவருடன் ராணி கமீலாவும் வருகை தந்தார். அவர்களுக்கு இசை வாத்தியங்கள் முழங்க…

Read More

வெறுப்பை உமிழும் ‘த கேரளா ஸ்டோரி’

சுதிப்தோ சென் இயக்கியுள்ள ‘த கேரளா ஸ்டோரி’ திரைப்படம் கடும் சர்ச்சைகளுக்கு மத்தியில் நேற்று இந்தியா முழுவதும் வெளியாகியுள்ளது. கேரளத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து தாதியர் படிப்பிற்காக கல்லூரியில் இணையும் நாயகிகளான ஷாலினி(ஆதா ஷர்மா), கீதாஞ்சலி(சித்தி இத்னானி), நிமா(யோகிதா பிகானி), ஆசிஃபா (சோனியா பலானி) ஆகியோர் விடுதியில் சந்தித்துக்கொள்கின்றனர்.  இதில் ஆசிஃபா இஸ்லாம் மத நெறிகளைக் கடுமையாகப் பின்பற்றுபவராக இருக்கிறார். நாளடைவில் நெருக்கமாகும் தன் தோழிகளிடமும் இஸ்லாம் மதத்தின் தேவை குறித்தும் அல்லாஹ் ஒருவனே இறைவன், மற்ற தெய்வங்கள் கோழைகள்…

Read More

முடிவுக்கு வந்தது யாழ்ப்பாணம் – தையிட்டி போராட்டம்!

யாழ்ப்பாணம் – தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்றுமாறு வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட்டம், நேற்று இரவு 8 மணியளவில் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். அத்துடன் பிரதேச மக்களுடன் கலந்துரையாடிய பின்னர் அடுத்தக்கட்ட செயற்பாடு தொடர்பில் முடிவெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தையிட்டி எமது நிலம், புத்த விகாரை வேண்டாம், இராணுவமே வெளியேறு என போராட்டகாரர்கள், கடந்த மூன்று நாட்களாக பதாகைகளை தாங்கியவாறு தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர் .14 குடும்பங்களுக்கு…

Read More

1.8 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேற்பட்ட மருந்துகளை நன்கொடையாக வழங்கிய ஈரான்!

ஈரான் குடியரசு 1.8 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேற்பட்ட புற்றுநோய் மருந்துகள் உட்பட அத்தியாவசிய மருந்துகளை இலங்கை அரசாங்கத்திற்கு சுகாதார அமைச்சின் ஊடாக நன்கொடையாக வழங்கியுள்ளது. ஈரானிய தூதுவர் ஹாசிம் அஷிட் இந்த மருந்துப் பொருட்களை சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார். இந்த நன்கொடையின் கீழ், நாட்டில் புற்றுநோய், இதய நோய், தோல் நோய், வைரஸ் தொற்று, உயர் இரத்த அழுத்தம், பார்கின்சன் போன்ற பல நோய்களுக்கான மருந்துகள் உட்பட பல அத்தியாவசிய மருந்துகள்…

Read More

“Open Mousqe” நிகழ்ச்சி – பௌத்த, இந்து, கிறிஸ்தவ பிள்ளைகள் பங்கேற்பு!

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இன்று 05-05-2023ம் சிலாபம் சோனகத் தெரு, ஜூம்ஆ பள்ளிவாசலில் “Open Mousqe” நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இதில் பௌத்த இந்து , இஸ்லாம், மற்றும் கிறிஸ்தவ, சர்வ மத தஹம், அறநெறி, மற்றும் அஹதிய்யா பாடசாலை மாணவ மாணவிகள் கலந்து சிறப்பித்தார்கள். இந்நிகழ்வில் பள்ளிவாசலில் நடைபெறும் விடயங்கள், ஒழுக்கம் சார்ந்த விடயங்கள் பற்றி விளக்கமளிக்கப்பட்டது.

Read More

“எருக்கலம்பிட்டி இப்றாஹிம் சேரின் மறைவு கவலை தருகிறது” – ரிஷாட் அனுதாபம்!

மன்னார், எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரியின் ஓய்வுபெற்ற ஆசிரியர் அல்ஹாஜ் முஹம்மது இப்றாஹிம் சேர் இறையடி சேர்ந்த செய்தி கவலையளிப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.  அன்னாரின் மறைவு குறித்து அவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில்,  “எந்தச் சந்தர்ப்பத்திலும் எல்லோருடனும் இன்முகத்துடன் பழகும் வாஞ்சையுள்ள குணமுடையவர். புன்முறுவலும் ஒரு “சதகா” வே என்ற இஸ்லாத்தின் உயர் கோட்பாட்டுக்கு உயிரூட்டுவதாகவே அவரது செயற்பாடுகள் இருந்தன. எனது அமைச்சில் என்னுடைய இணைப்புச் செயலாளராக…

Read More

A/L விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் மென்மேலும் மோசமடைந்துள்ளன!

உயர் தர பரீட்சை விடைத்தாள்களை மதிப்பிடுவது தொடர்பில் நிலவும் பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதியை சந்திக்க  பல்கலைக்கழக ஆசிரியர் ஒன்றியம் கோரிக்கை விடுத்திருந்த போதும் ஜனாதிபதி அதற்கான சந்தர்ப்பத்தை வழங்காமல் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார் என இலங்கை ஆசிரியர்  ஒன்றியம் தெரிவித்துள்ளது. “விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் மென்மேலும் மோசமடைந்துள்ளன. சந்திப்புக்கான அனுமதியை நாங்கள் ஒரு வாரத்திற்கு முன்னதாகவே கோரியிருந்தோம். கலந்துரையாடலை நடாத்தாமல் நாட்டிலிருந்து செல்வது நல்லதல்ல. விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் தடைப்படுவதற்கான காரணம் யார் என்ற கேள்வியே எழுகிறது”…

Read More

வெளிநடப்பு செய்த பாராளுமன்ற உறுப்பினர்கள் தையிட்டி விகாரை பகுதிக்கு வருகை !

யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திலிருந்து இன்றைய தினம் வெளிநடப்பு செய்த பாராளுமன்ற உறுப்பினர்கள், வலிகாமம் வடக்கு தையிட்டி விகாரை பகுதிக்கு சென்றுள்ளனர். யாழ்ப்பாணம் தையிட்டி விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், விகாரையை அகற்ற கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் உள்ளிட்டவர்களை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளதையும் கண்டித்து, ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளி நடப்பு செய்துள்ளனர். யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம், இன்றைய தினம் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண…

Read More

யாழ் வாழைப்பழம் டுபாய்க்கு!

நவீன விவசாயமயமாக்கல் திட்டத்தின் கீழ், யாழ்ப்பாணத்தில் இருந்து டுபாய்க்கு வாழைப்பழம் ஏற்றுமதி செய்யும் திட்டத்தின் நிகழ்வு நேற்றைய தினம் (3) நடைபெற்றது. யாழ்ப்பாணம் நிலாவரை சந்தியில் அமைக்கப்பட்டுள்ள வாழைக்குலை பதப்படுத்தல் நிலையத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது. யாழ் குடாநாட்டில் கோப்பாய், உடுவில், தெல்லிப்பளை பிரதேச செயலர் பிரிவுகளில், தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் கதலி வாழைக்குலைகள், நிலாவரையில் உள்ள வாழைப்பழம் சுத்திகரிப்பு நிலையத்தில் பதப்படுத்தப்பட்டு, அங்கிருந்து நேரடியாக துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, டுபாய் நாட்டுக்கு வாழைப்பழங்கள் ஏற்றுமதி…

Read More

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் இலங்கைக்கு அவசர அச்சறுத்தல் – சர்வதேச மன்னிப்புச் சபை!

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் இலங்கைக்கு அவசர அச்சறுத்தல் என சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது. அத்துடன், இலங்கையில் அதிகரித்து வரும் போராட்டங்களுக்கு பதிலளிக்கும் வகையில் பயங்கரவாத தடுப்பு சட்டத்திற்கு (PAT) பதிலாக மாற்றுச் சட்டத்தை முன்மொழிய வேண்டும் எனவும் கோரியுள்ளது. மேலும், உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் (ATA) இலங்கையில் மனித உரிமைகளுக்கு அவசர அச்சுறுத்தலாக உள்ளது என்று ஆசியாவுக்கான சட்டப் பணிப்பாளர் கரோலின் நேஷ் தெரிவித்துள்ளார். இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால் அமைதியான முறையில் போராடுவதற்காகன…

Read More

ஊடகவியலாளர் சண்முகம் தவசீலனுக்கு எதிரான வழக்கு – புலனாய்வாளருக்கு அழைப்பாணை!

முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் மீது முல்லைத்தீவு கோட்டாபய கடற்படை முகாம் கடற்படை அதிகாரி தொடர்ந்த வழக்கானது கடந்த 2019 ம் ஆண்டு முதல்  இடம்பெற்று  வரும் நிலையில்,  இன்றையதினம் (04.05.2023) முல்லைத்தீவு நீதவான் நீதி மன்றில் குறித்த வழக்கு தொடர்பான விசாரணைகள்  இடம்பெற்றது. இதன் போது வழக்கு தொடுனரான கடற்படை புலனாய்வாளருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதோடு வழக்கு விசாரணைகள் எதிர்வரும் 21.09.2023 க்கு தவணையிடப்பட்டுள்ளது   முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் மீது முல்லைத்தீவு…

Read More