Read Time:1 Minute, 15 Second
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்…
சவுதி அரேபிய, அல் கப்ஜி தஃவா நிலையத்தினால் மாதாந்தம் நடாத்தப்படும் பயான் நிகழ்சி இன்ஷா அல்லாஹ் 26/10/2018 வெள்ளிக் கிழமை இஷா தொழுகைத் தொடர்ந்து 7.30 மணியளவில் தஃவா நிலைய பள்ளிவாசலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.
இந்நிகழ்வில் அல் கோபார் – ராக்காஹ் தஃவா நிலைய அழைப்பாளர் அஷ்ஷெய்க் மஸ்ஊத் ஸலபி அவர்கள் (இலங்கை – கந்தலாய்) “முதலாம் கலீபா அபூபக்கர் (ரழி) அவர்களின் வாழ்க்கை வரலாறு” எனும் தலைப்பில் உரை நிகழ்த்த உள்ளார்.
மேலும் நிகழ்சி முடிவில் கேள்வி – பதில் இடம் பெற்று தகுந்த பரிசில்களும் வழங்கப்படும். இந்நிகழ்வில் இராப் போசனமும் தயார் செய்யப்பட்டுள்ளது.
எனவே தமிழ் அறிந்த நெஞ்சங்கள் அனைவரும் கலந்து பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம்
பெண்களுக்கு தனி இட வசதி உண்டு