
இழந்து போன எங்கள் மரியாதை
Mohamed Nizous
கொடுக்கல் வாங்கல்களில்
குறைகள் செய்யார் என
அடுத்தவர் போற்றும் விதம்
அழகாய் இருந்தார் அன்று
‘குடு’க்கள் வாங்கலில்
கொலையும் செய்வாரென
எடுத்துப் பேசுமளவு
இழிவாய்ப் போனது இன்று
வட்டி என்று சொன்னால்
கிட்டவும் வரமாட்டார் என
தட்டிச் சொல்லுமளவு
தரமாய் இருந்தார் அன்று
கெட்ட வட்டி கட்ட
கட்டிய வீட்டையும் விற்கும்
முட்டாள் ஆட்கள் என்று
முனியப்படுகிறார் இன்று
அடக்க ஒடுக்கம் கொண்டு
அழகாய் குடும்பம் காத்து
நடக்கும் பெண்கள் என்று
நம்மவர் இருந்தார் அன்று
படத்தில் வருவது போன்று
பாஷன் பின்னால் செல்லும்
மடத்தனமான சிலரால்
மானமே போகுது இன்று
ஹாஜியார் கடைக்குச் சென்றால்
கணக்காய் நிறுத்துத் தருவார்
பூஜை செய்வோர் கூட
பொருள் வாங்க அன்று வந்தார்
பேச்சால் மயக்கி நடித்து
பிழையான பொருளைத் தருவான்
யோசிச்சுப் போங்க என்று
இமாமே சொல் நிலை இன்று
அமல்கள் கூடியிருக்கு
அறிவும் கூடி இருக்கு
ஆனால் அஹ்லாக் நேர்மை
அகன்று போய் இருக்கு
அடுத்தவன் போல தானும்
ஆடம்பரம் வேண்டும் என்று
ஆட்டம் போடும் சிலரால்
அன்று சமூகம் பெற்ற
அந்த உயர் மதிப்பு
அழிந்து போகின்றது…!
More Stories
டாக்டர் ஜலீலா முஸம்மில் எழுதிய “சிறகு முளைத்த மீன்” கவிதை நூல் வெளியீடு!
ஏறாவூரைச் சேர்ந்த வைத்திய அதிகாரி ஜலீலா முஸம்மில் எழுதிய "சிறகு முளைத்த மீன்" எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா, ஏறாவூர் வாவிக்கரை வீதியில் அமைந்துள்ள கலாசார...
கம்யூனிச கிருமி மதம் மாறியது
இஸ்லாமிய வைரஸ் .................. உரத்த குரலில் அது அறிவிக்கப்படுகிறது ' கொள்ளை நோயை கொண்டு வந்த இஸ்லாமியர்கள் உடனடியாக வெளியே வரவும் நீங்கள் பதுங்கியிருக்கும் ஒவ்வொரு கணமும்...
ஏய் தீவிரவாதியே…!!!
Raazi Muhammeth Jabir உடம்பு வெடித்துச் சிதறிய இன்பமா உனக்கு? உன் உயிர் உடம்பிலிருந்து பச்சைக் கிளிப் பறவையாய்ப் பறந்து சென்றதா? கஸ்தூரி கலந்த துணியில் உன்...
உனக்கு நன்றிகள்
Mohamed Nizous எமது எகோதரங்களுக்கு இலகுவாக ஷஹீத் பதவி எடுத்துக் கொடுத்த உனக்கு எமது நன்றிகள் ஊடகத்தின் முகத்தை உரித்துக் காட்டி வேடதாரிகளை எமக்கு வெளிப்படுத்தி'னாய்'- நன்றிகள்...
ஏறி நின்று பார்த்த போது
Mohamed Nizous ஏழு பேரும் சேர்ந்து ஏறி நின்று பார்த்த போது தெளிவாகத் தெரிந்தது திரு நாட்டின் அவலங்கள் இந்தத் தேசத்தில் 'ஞானத்'திற்கு உள்ள மதிப்பு விஞ்ஞானத்திற்கு...
தலைவன் – கவிதை
வை எல் எஸ் ஹமீட் 25/01/2019 நிலவு சுடுகிறது; என்றேன். குளிர மட்டும் தெரிந்த நிலவு எப்படி சுடும்; என்றான். சேவல் முட்டையிட்டது; என்றேன். கற்பனைக்கும் ஓர்...