இறக்குமதி சீனி, பருப்பு, கோதுமை மாவின் விலைகள் குறைப்பு!
இறக்குமதி செய்யப்படும் வெள்ளை சீனி, பருப்பு மற்றும் கோதுமை மாவின் மொத்த விலை குறைக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி ஒரு கிலோ வெள்ளை சீனியின் மொத்த விலை 300 ரூபாயில் இருந்து 265 ரூபாவாகவும், ஒரு கிலோ கோதுமை மாவின் மொத்த விலை 190 ரூபாவில் இருந்து 175 ரூபாவாகவும், பருப்பு கிலோ ஒன்றின் மொத்த விலை 350 ரூபாயிலிருந்து 285 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
தற்போது தங்களிடம் போதுமான அளவு வெள்ளை சீனி, கோதுமை மாவு மற்றும் பருப்பு கையிருப்பு இருப்பதாகவும், வரும் பண்டிகைக் காலத்தில் நுகர்வோர் இந்த அத்தியாவசிய உணவுப் பொருட்களை எந்தவித தடையுமின்றி வாங்க முடியும் என்றும் இறக்குமதியாளர்கள் கூறினர்.
இதேவேளை, வெள்ளை சீனி, பருப்பு மற்றும் கோதுமை மாவின் விலைகள் குறைவடைந்துள்ள போதிலும், சில பல்பொருள் அங்காடிகள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்களில் அந்த பொருட்களின் விலைகள் குறைவடையவில்லை என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
More Stories
சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.எஸ். பாடசாலை அபிவிருத்திக்கு ரூ.2 மில்லியன் நிதி ஒதுக்கீடு!
சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.எஸ். பாடசாலை அபிவிருத்தி பணிகளுக்காக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப், தனது பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்ட நிதியிலிருந்து முதற்கட்டமாக 2...
பேருவளை ஜாமிஆ நளீமிய்யா கலாபீடம் – மலேசியாவின் இஸ்லாமிய பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம் கைச்சாத்து!
பேருவளை ஜாமிஆ நளீமிய்யா கலாபீடம் (NIIS), மலேசியாவின் இஸ்லாமிய கலைகளுக்கான பல்கலைக்கழகத்துடன் (University Sains Islam Malaysia – USIM- Islamic Science University of Malaysia)...
நாவிதன்வெளி பிரதேச பள்ளிவாசல்களுக்கு நிதி ஒதுக்கீடு!
திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து நாவிதன்வெளி பிரதேச...
மஹிந்தானந்த விடுதலை!
முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் அமைச்சராக இருந்த காலப்பகுதியில் சட்டவிரேதமான முறையில் கொழும்பில் கின்சி வீதியில்...
ரணில் – சஜித் – அனுர நேரலையில் விவாதம்!
ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாச இன்னும் தனது பங்கேற்பை உறுதிப்படுத்தாத நிலையில், மூன்று பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களுடன் சகோதர ஊடகங்களான டெய்லி மிரர் மற்றும்...
‘ரணிலின் கையிலேயே நாட்டை ஒப்படைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்’ – ஐக்கிய காங்கிரஸ்!
எதிர்வருகின்ற ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க தோல்வி அடைந்தாலும் இறுதியில் ரணில் விக்ரமசிங்கவின் கையிலேயே நாட்டை ஒப்படைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என ஐக்கிய காங்கிரஸ் கட்சியின்...