கிண்ணியாவை பல மாதங்களாக காணவில்லை!
கிண்ணியா, தம்பலகாமம் பிரதான வீதியின் தம்பலகாமத்துக்கு அடுத்ததாக காணப்படும் வீதி அபிவிருத்தி அதிகார சபை மூலமாக வைக்கப்பட்ட கிண்ணியா எனும் பெயர் பலகையை பல மாதங்களாக காணவில்லை .
சிவத்தப்பாலத்தடியில் நடப்பட்டிருந்த குறித்த பெயர்ப் பலகை இன்மையால் கிண்ணியா எனும் பிரதேச செயலகப் பகுதியை எடுத்துக்காட்டும் பெயர் இன்மையால் பாதசாரிகள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கின்றனர்.
வீதி அபிவிருத்தி அதிகார சபை மூலமாக நடப்பட்ட குறித்த பெயர் பலகை பல மாத காலமாக காணாமல் போயுள்ளது இது தொடர்பில் உரிய சபை இது வரைக்கும் அதனை மீண்டும் நட நடவடிக்கை எடுக்கத் தவறியமை ஏனோ தெரியவில்லை இது தவிர புதிதாக அமைக்கப்பட்ட பல காபட் வீதிகளுக்கான முறையான பெயர் பலகையும் அமைக்கப்படவில்லை இதனால் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் பாதசாரிகள் வீதியை தேடியும் அங்கும் இங்கும் அலைகின்றனர்.
எனவே இது தொடர்பில் உரிய சபை நடவடிக்கை எடுத்து வீதிகளுக்கான பெயர் பலகைகளை நடுமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.
ஹஸ்பர்-
More Stories
சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.எஸ். பாடசாலை அபிவிருத்திக்கு ரூ.2 மில்லியன் நிதி ஒதுக்கீடு!
சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.எஸ். பாடசாலை அபிவிருத்தி பணிகளுக்காக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப், தனது பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்ட நிதியிலிருந்து முதற்கட்டமாக 2...
பேருவளை ஜாமிஆ நளீமிய்யா கலாபீடம் – மலேசியாவின் இஸ்லாமிய பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம் கைச்சாத்து!
பேருவளை ஜாமிஆ நளீமிய்யா கலாபீடம் (NIIS), மலேசியாவின் இஸ்லாமிய கலைகளுக்கான பல்கலைக்கழகத்துடன் (University Sains Islam Malaysia – USIM- Islamic Science University of Malaysia)...
நாவிதன்வெளி பிரதேச பள்ளிவாசல்களுக்கு நிதி ஒதுக்கீடு!
திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து நாவிதன்வெளி பிரதேச...
மஹிந்தானந்த விடுதலை!
முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் அமைச்சராக இருந்த காலப்பகுதியில் சட்டவிரேதமான முறையில் கொழும்பில் கின்சி வீதியில்...
ரணில் – சஜித் – அனுர நேரலையில் விவாதம்!
ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாச இன்னும் தனது பங்கேற்பை உறுதிப்படுத்தாத நிலையில், மூன்று பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களுடன் சகோதர ஊடகங்களான டெய்லி மிரர் மற்றும்...
‘ரணிலின் கையிலேயே நாட்டை ஒப்படைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்’ – ஐக்கிய காங்கிரஸ்!
எதிர்வருகின்ற ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க தோல்வி அடைந்தாலும் இறுதியில் ரணில் விக்ரமசிங்கவின் கையிலேயே நாட்டை ஒப்படைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என ஐக்கிய காங்கிரஸ் கட்சியின்...