கோட்டாவின் உடற் பயிற்சி பயிற்றுவிப்பாளர் கைது!
ஸ்ரீலங்கா இராணுவத்தின் கொமாண்டோ படையில் லான்ஸ் கோப்ரல் ஆக பணியாற்றிய முன்னாள் சிப்பாய் ஒருவர் இரண்டு கிராம் ஹெரோய்னுடன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக கண்டி குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உடற் பயிற்சி பயிற்றுவிப்பாளராக கடமையாற்றி முன்னாள் ஜனாதிபதிக்கு நெருக்கமாக இருந்த சந்தேகநபர், கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதி பதவியில் இருந்து வெளியேறிய பின்னர் இராணுவத்தை விட்டு வெளியேறியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர், யஹலதன்ன நெல்லிகல பிரதேசத்தில் வசிக்கும் 35 வயதுடையவர். ஹெரோயின் போதைப்பொருள் கடத்துவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய சந்தேகநபர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவரது வீட்டை சோதனை செய்த போது, ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டுள்ளது.
More Stories
சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.எஸ். பாடசாலை அபிவிருத்திக்கு ரூ.2 மில்லியன் நிதி ஒதுக்கீடு!
சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.எஸ். பாடசாலை அபிவிருத்தி பணிகளுக்காக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப், தனது பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்ட நிதியிலிருந்து முதற்கட்டமாக 2...
பேருவளை ஜாமிஆ நளீமிய்யா கலாபீடம் – மலேசியாவின் இஸ்லாமிய பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம் கைச்சாத்து!
பேருவளை ஜாமிஆ நளீமிய்யா கலாபீடம் (NIIS), மலேசியாவின் இஸ்லாமிய கலைகளுக்கான பல்கலைக்கழகத்துடன் (University Sains Islam Malaysia – USIM- Islamic Science University of Malaysia)...
நாவிதன்வெளி பிரதேச பள்ளிவாசல்களுக்கு நிதி ஒதுக்கீடு!
திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து நாவிதன்வெளி பிரதேச...
மஹிந்தானந்த விடுதலை!
முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் அமைச்சராக இருந்த காலப்பகுதியில் சட்டவிரேதமான முறையில் கொழும்பில் கின்சி வீதியில்...
ரணில் – சஜித் – அனுர நேரலையில் விவாதம்!
ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாச இன்னும் தனது பங்கேற்பை உறுதிப்படுத்தாத நிலையில், மூன்று பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களுடன் சகோதர ஊடகங்களான டெய்லி மிரர் மற்றும்...
‘ரணிலின் கையிலேயே நாட்டை ஒப்படைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்’ – ஐக்கிய காங்கிரஸ்!
எதிர்வருகின்ற ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க தோல்வி அடைந்தாலும் இறுதியில் ரணில் விக்ரமசிங்கவின் கையிலேயே நாட்டை ஒப்படைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என ஐக்கிய காங்கிரஸ் கட்சியின்...