ஐக்கிய மக்கள் சக்தி தேர்தலில் வெற்றியீட்டும் – மரிக்கார்!
புதிய கருத்து கணிப்புக்களின் அடிப்படையில் ஐக்கிய மக்கள் சக்தி முன்னிலை வகிப்பதாக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் மரிக்கார் தெரிவித்துள்ளார்.
அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியை விடவும் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி முன்னிலை வகிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
கொலன்னாவ பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த கருத்து கணிப்பின் அடிப்படையில் ஐக்கிய மக்கள் சக்திக்கு 39 வீதமான ஆதரவும், தேசிய மக்கள் சக்திக்கு 20 வீதமான ஆதரவும் காணப்படுவதாகவும், 24 வீதமானவர்கள் தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
தற்பொழுது தீர்மானம் எடுக்க முடியாத நிலையில் இருக்கும் நபர்களும் வெற்றிபெறும் தரப்பிற்கே ஆதரவு வழங்குவார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனடிப்படையில் ஐக்கிய மக்கள் சக்தி தேர்தலில் வெற்றியீட்டும் என மரிக்கார் தெரிவித்துள்ளார்.
More Stories
சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.எஸ். பாடசாலை அபிவிருத்திக்கு ரூ.2 மில்லியன் நிதி ஒதுக்கீடு!
சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.எஸ். பாடசாலை அபிவிருத்தி பணிகளுக்காக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப், தனது பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்ட நிதியிலிருந்து முதற்கட்டமாக 2...
பேருவளை ஜாமிஆ நளீமிய்யா கலாபீடம் – மலேசியாவின் இஸ்லாமிய பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம் கைச்சாத்து!
பேருவளை ஜாமிஆ நளீமிய்யா கலாபீடம் (NIIS), மலேசியாவின் இஸ்லாமிய கலைகளுக்கான பல்கலைக்கழகத்துடன் (University Sains Islam Malaysia – USIM- Islamic Science University of Malaysia)...
நாவிதன்வெளி பிரதேச பள்ளிவாசல்களுக்கு நிதி ஒதுக்கீடு!
திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து நாவிதன்வெளி பிரதேச...
மஹிந்தானந்த விடுதலை!
முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் அமைச்சராக இருந்த காலப்பகுதியில் சட்டவிரேதமான முறையில் கொழும்பில் கின்சி வீதியில்...
ரணில் – சஜித் – அனுர நேரலையில் விவாதம்!
ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாச இன்னும் தனது பங்கேற்பை உறுதிப்படுத்தாத நிலையில், மூன்று பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களுடன் சகோதர ஊடகங்களான டெய்லி மிரர் மற்றும்...
‘ரணிலின் கையிலேயே நாட்டை ஒப்படைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்’ – ஐக்கிய காங்கிரஸ்!
எதிர்வருகின்ற ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க தோல்வி அடைந்தாலும் இறுதியில் ரணில் விக்ரமசிங்கவின் கையிலேயே நாட்டை ஒப்படைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என ஐக்கிய காங்கிரஸ் கட்சியின்...